Tuesday, January 5, 2021

 


 

கொரோனா என்ற நுண்ணுயிரி

 

பொன் குலேந்திரன்  ( கனபா )

 

 

 

  பக்கம் எல்லாம்    ஊடகச் செய்தி

   பார்வைக்கு எங்கும் கொரோனா

 

 பணம் தேடி அமெரிக்கா  சென்றவர்கள்

படுகிறார்க்கள் அங்கு அவதி .

 

கை கூப்பி  வணங்கும் முறை

கை கொடுக்கிறது மேற்கத்தியனுக்கு

 

உண்ண முன் கை கழுவு சொன்னது

 உலகுக்கு தமிழன் கலாச்சாரம் .

 

தனக்கு எதிரி மஞ்சள் நீர் ,சாம்பிராணி 

தூரத்தில் நின்றது பயத்தில் கொரோனா

 

தழுவி காதலியை முத்தமிட

தடைவிதித்தது   கொரோனா வைரஸ்

 

கொரோனா தோற்றத்தை அறியும்  புலனாய்வில்

 கேள்விக் குறிகள பல.

 

சென்நிற  தேசம் போட்ட திட்டத்தால்    

செழிப்பாய்  வளர்கிறது    புது அரசியல்.

 

உலக பொருளாதாரம். உருக்குலைந்து

 உண்ண வழியின்றி  வறுமையை   வளர்கிறது !

 

 கொரோனாவா   தேர்தலா  எது முக்கியம்

கேட்கிறார்கள்  அரசினை வாக்காளர்கள்.

 

இனம் ,மதம்,  மொழி   என பாராமல்

 இலங்கைக்கு  பகுந்தது சுற்றுலாவடிவில்.

 

அணுகுண்டு   அழித்தது  உயர்களை

அழிவு  அதிகம்  கொரோனா வருகையால்

 

 

சுதந்திரமாய்  வீதியில் நடந்த  எம்மை

சும்மா  வீட்டில்  முடங்க செய்தது கொரோனா

 

முடங்கி வீட்டில்  இருந்து   குடித்து   குடும்பத்தை 

துன்புறுத்த துணை போகிறது  கொரோனா.

 

மருத்துவத் துறை   சேவைக்கு ஒரு சவால்

மனிதன் வெல்வது நிட்சயம் ! 

 

 

  *****

 

Thursday, December 31, 2020

 


Risks of getting COVID-19

The risk of getting COVID-19 is evolving daily and varies between and within communities. Overall, the risk to Canadians remains high. This doesn't mean that all Canadians will get the disease. It means that there's already a significant impact on our health care system.

 

To stay healthy and to protect ourselves and others, we must be mindful of the ever-present risk of exposure to the virus. Some settings and situations increase the risk, such as being in:

 

closed spaces

crowded places

close-contact settings where you can't keep 2 metres apart from each other

close-range conversations

settings where there's singing, shouting or heavy breathing (for example, during exercise)

It's particularly important to avoid settings where these risks overlap, such as closed spaces and crowded spaces where close-range conversations occur.

 

Holidays and celebrations

 People at a greater risk of exposure

 People at risk of more severe disease or outcomes

 Going out

 Pregnant people

 Travellers

 Check if you've been exposed

 Survival of coronaviruses on surfaces

 Swimming

 Food

 Animals in Canada

 Sexual health

False and misleading claims

Health Canada is closely tracking all potential drugs and vaccines in development in Canada and abroad. We are working with companies, academic research centres and investigators to help expedite the development and availability of treatments to prevent and treat COVID-19. Learn more about drugs and vaccines being developed or authorized for COVID-19.

 

Selling unauthorized health products or making false or misleading claims to prevent, treat or cure COVID-19 is illegal in Canada. We take this matter very seriously and we're taking action to stop this activity.

 

We encourage anyone who has information regarding potential non-compliant sale or advertising of any health product claiming to treat, prevent or cure COVID-19, to report it using our online complaint form.

 

We publish a list of companies and products and the status of the review on the list of health product advertising incidents related to COVID-19.

 

Exposure to electromagnetic fields (EMF) from 5G devices doesn't spread COVID-19. There's no scientific basis behind these claims. Both the World Health Organization and the International Commission on Non-Ionizing Radiation Protection have also addressed these claims.

Sunday, December 27, 2020


கொரோனா வைரஸ் அறிகுறிகள் என்ன? உங்களுக்கு கோவிட்-19 தொற்று உள்ளதா என கண்டுபிடிப்பது எப்படி?

கொரோனா வைரஸ்

கொரோனா வைரஸ் என்றால் என்ன? இந்த வைரஸ் எப்படி ஒருவருக்கு பரவுகிறது? இந்த வைரஸை கட்டுப்படுத்த முடியுமா? போன்ற பல கேள்விகளுக்கு விடையளிக்கிறது இந்த கட்டுரை.

 

கொரோனா வைரஸ் தொற்றின் அறிகுறிகள் என்ன?

புதிதாக, தொடர்ச்சியான இருமல். ஒரு மணி நேரத்துக்கும் மேல் அந்த இருமல் தொடரும் அல்லது 24 மணி நேரத்துக்குள் மூன்று அல்லது நான்கு முறை தொடர் இருமல் வரும்.

காய்ச்சல். உங்கள் உடல் வெப்பம் 37.8 டிகிரி செல்ஸியசைவிட அதிகமாகும்.

வாசனை அல்லது சுவையை உணர முடியாமல் போகலாம்.

கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகும் நபர்களில் குறைந்தது 85% பேருக்கு மேற்கண்ட மூன்று அறிகுறிகளில் ஒன்று தென்படும் என்று இங்கிலாந்து பொது சுகாதாரத் துறை தெரிவிக்கிறது.

 

உங்களுக்கு உங்கள் அருகில் இருக்கும் ஒருவருக்கோ இத்தகைய அறிகுறிகள் தென்பட்டால், வீட்டிலேயே இருப்பது, கொரோனா வைரஸ் தொற்று பிறருக்கு வராமல் தடுக்க உதவும்.

 

இந்த கோவிட்-19 முதன்முதலில் காய்ச்சலாக தொடங்கும். பின் வறட்டு இருமல் அதன்பின் ஒரு வாரம் கழித்து சுவாசக் கோளாறுகள் ஏற்படும். ஆனால் இந்த அறிகுறிகள் உள்ளவர்கள் அனைவரும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் என்று அர்த்தமில்லை. இந்த அறிகுறிகள் பிற பொதுவான வைரஸாலும் ஏற்படக்கூடியவை.

 

கொரோனா வைரஸ்: சர்வதேச நிலை என்ன? மரணங்கள் எவ்வளவு? - எளிய விளக்கம்

கோவிட்-19 அறிகுறிகள் தென்படி, ஒருவரின் உடலில் தொற்று உண்டான நேரத்தில் இருந்து சராசரியாக ஐந்து நாட்கள் ஆகும். எனினும் 14 நாட்கள் வரை கூட ஆகலாம் என்கிறது உலக சுகாதார நிறுவனம்.

 

எல்லோருக்கும் அறிகுறிகள் ஒன்று போல இருக்குமா?

இல்லை. அறிகுறிகள் ஒருவருக்கொருவர் மாறுபடும். இதற்கு காரணம் வெவ்வேறு நபர்களின் உடல்களில் வெவ்வேறு பாகங்களை கொரோனா வைரஸ் தாக்கும் என்பதுதான்.

 

காய்ச்சல் இல்லாத இன்ஃபுளுவென்சா: தலைவலி, நுகரும் உணர்வு இல்லாமல் போதல், தசை வலி, சளி, தொண்டை எரிச்சல், நெஞ்சு வலி.

 

காய்ச்சலுடன் கூடிய இல்லாத இன்ஃபுளுவென்சா: தலைவலி, நுகரும் உணர்வு இல்லாமல் போதல், தசை வலி, சளி, தொண்டை எரிச்சல், பசியின்மை, தொண்டை அடைப்பு அல்லது பேச்சு தடைபடுவது போன்ற உணர்வு.

 

ஜீரண மண்டலத்தில் அறிகுறிகள்: தலைவலி, நுகரும் உணர்வு இல்லாமல் போதல், காய்ச்சல், சளி, தொண்டை எரிச்சல், பசியின்மை, நெஞ்சு வலி, வயிற்று போக்கு.

 

உடல் சோர்வு (முதல் நிலை தீவிரத் தன்மை): தலைவலி, நுகரும் உணர்வு இல்லாமல் போதல், காய்ச்சல், சளி, தொண்டை எரிச்சல், பசியின்மை, நெஞ்சு வலி, வயிற்று போக்கு, தசை வலி, தொண்டை அடைப்பு அல்லது பேச்சு தடைபடுவது போன்ற உணர்வு, உடல் சோர்வு.

 

குழப்பநிலை (இரண்டாம் நிலை தீவிரத் தன்மை): தலைவலி, நுகரும் உணர்வு இல்லாமல் போதல், காய்ச்சல், சளி, தொண்டை எரிச்சல், நெஞ்சு வலி, வயிற்று போக்கு, தசை வலி, தொண்டை அடைப்பு அல்லது பேச்சு தடைபடுவது போன்ற உணர்வு, உடல் சோர்வு, தெளிவாக சிந்திக்க இயலாமல் போகும் மனநிலை.

 

வயிறு மற்றும் சுவாசக் கோளாறு (அதீத தீவிரத் தன்மை): தலைவலி, நுகரும் உணர்வு இல்லாமல் போதல், காய்ச்சல், சளி, தொண்டை எரிச்சல், பசியின்மை, நெஞ்சு வலி, வயிற்று வலி, வயிற்று போக்கு, தசை வலி, தொண்டை அடைப்பு அல்லது பேச்சு தடைபடுவது போன்ற உணர்வு, உடல் சோர்வு, மூச்சு விடுவதில் சிரமம்.

 

இந்த கோவிட் 19 தீவிரமாக இருந்தால், நிமோனியா, சிறுநீரக பழுது, தீவிர சுவாசப் பிரச்சனை, தீவிர நிலையில் உயிரிழப்பும் ஏற்படலாம். பொதுவாக இந்த அறிகுறிகள் சராசரியாக ஐந்து நாட்களில் தெரியலாம என விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர். ஆனால் சிலருக்கு அதைக்காட்டிலும் தாமதம் ஆகலாம் என்றும் கூறப்படுகிறது.

 

சிலருக்கு உடல் நலக்குறைவு இருப்பது தென் படுவதற்கு முன்னரே அவர் தொற்றை பரவலாம் என்றும் கூறப்படுகிறது.

 

குழந்தைகளுக்கு கொரோனா வந்தால் என்ன அறிகுறி?

வாந்தி, வயிற்றுப் போக்கு, வயிற்றுப் பகுதியில் தசை பிடிப்பு ஆகியவை குழந்தைகளுக்கு கொரோனா வைரஸ் தொற்று வந்ததற்கான அறிகுறி என்று ஆய்வாளர்கள் கருதுகிறார்கள்.

 

இருமல் வந்தால் கோவிட்-19 அறிகுறியா?

பல வைரஸ் தொற்றுகளுக்கும் கோவிட்-19 தொற்று போன்றே அறிகுறிகள் இருக்கும். குறிப்பாக இந்த அறிகுறிகள் குளிர் காலத்தில் பரவலாக இருக்கும்.

 

கொரோனா வைரஸ் தொற்றின் மூன்று முக்கிய அறிகுறிகளில் ஏதாவது ஒன்று இருக்கும், பாதிக்கும் மேற்பட்டவர்களுக்கு கோவிட்-19 இருப்பதற்கான வாய்ப்பு இருக்கும். அவர்கள் வேறு வைரஸ் தொற்றுகளால் பாதிக்கப்பட்டிருக்கலாம்.

 

ஆனாலும், பரிசோதனை செய்து அதை உறுதிப்படுத்திக்கொள்வது நல்லது.

 

எப்போது மருத்துவமனைக்கு செல்லவேண்டும்?

கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட பெரும்பாலானவர்கள், போதிய ஒய்வு மற்றும் பாராசெட்டமால் போன்ற வலி நிவாரணிகளை எடுத்துக் கொண்டாலே குணமாகிவிடுவர்.

 

ஆனால், மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு செல்வதற்கு முக்கிய காரணம் சுவாசிப்பதில் பிரச்சனை ஏற்படுவதால்தான்.

 

கொரோனா வைரஸ் பரவல் தீவிரமானால் இந்தியாவால் சமாளிக்க முடியுமா?

பாதிக்கப்பட்டவர்களின் நுரையீரலை பரிசோதிக்கும் மருத்துவர்கள், அது அந்தளவுக்கு பாதிக்கப்பட்டுள்ளது என்பதை கண்டறிந்து, பிராணவாயு சிகிச்சை அல்லது வெண்டிலேட்டர் சிகிச்சை எடுத்துக்கொள்ள பரிந்துரைப்பார்.

 

பிரிட்டனில் என்.ஹெச்.எஸ் 111 வலைத்தளம் இது தொடர்பான போதுமான தகவல்களை வெளியிட்டுள்ளது. மேலும் சுவாசப் பிரச்னை ஏற்படும்போது 999 என்ற மருத்துவ அவசர சிகிச்சை எண்ணை அழைக்கவும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

 

தீவிர சிகிச்சை பிரிவில் என்ன நடக்கும்?

மிகவும் கடுமையாக உடல்நலன் பாதிக்கப்படுபவர்கள் அனுமதிக்கப்படும் மருத்துவமனை பிரிவே தீவிர சிகிச்சை பிரிவு.

 

கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்படும் நோயாளிகளுக்கு பிராணவாயு சிகிச்சை அளிக்கப்படும்.

 

மிகவும் அதிகமாக பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு செலுத்தப்படும் பிராணவாயுவின் அளவு மற்றவர்களுக்கு வழங்கப்படுவதில் இருந்து முற்றிலும் மாறுபடும்.

 

கடுமையான பாதிப்பை சந்திந்தவர்களுக்கு வென்டிலேட்டர்கள் மூலம் அவர்களின் சுவாசப் பிரச்னை சரிசெய்ய துரித நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.

 

நீங்கள் கொரோனா தொற்று பாதிக்கப்பட்ட இடங்களுக்கு பயணம் செய்திருந்தாலோ அல்லது பயணம் செய்தவருடன் தொடர்பில் இருந்தாலோ, விட்டிலேயே இருங்கள். குறிப்பாக உங்களுக்கு லேசாக ஏதேனும் அறிகுறி இருந்தாலோ அது சரியாகும் வரை பிறருடன் தொடர்பில் இருப்பதை தவிர்த்து விடுங்கள். மாஸ்க் (முகக்கவசம்) அணிந்து கொள்ளுங்கள்.

 

நீங்கள் மருத்துவரிடம் சென்றாலும் அது முழுமையாக உறுதிப்படுத்தப்படுமா என்பது தெரியவில்லை. ஏனென்றால் வைரஸ் தொற்று ஏற்பட்டு அது அறிகுறிகள் காட்டுவதற்கு 14 நாட்கள் எடுத்துக் கொள்ளும்.

 

உங்கள் மாநில கொரோனா உதவி எண்ணுக்கு தொடர்பு கொள்ளுங்கள். அதன் பின் சுகாதார அதிகாரிகள் உங்களின் மாதிரிகளை சேகரிப்பர். இந்தியாவில் தற்போது 15 சோதனை ஆய்வகங்கள் உள்ளன. உங்களுக்கு தொற்று இருப்பது தெரிந்தால் நீங்கள் தனிமை வார்டில் சிகிச்சை பெறுவீர்கள்.

 

கொரோனாவிலிருந்து நான் என்னை தற்காத்து கொள்வது எப்படி?

உங்கள் கைகளை குறைந்தது 20 நொடிகள் கழுவ வேண்டும். உங்கள் கைகளின் அனைத்து பாகங்களுக்கும் கவனம் கொடுங்கள். சோப்பு மற்றும் நீரைக் கொண்டு நன்றாக கழுவுங்கள். உங்கள் கண்கள், மூக்குகள், மற்றும் வாயை தொடுவதை தவிருங்கள் எனவே அந்த வழியில்தான் வைரஸ் உங்கள் உடம்பில் பரவும்.

 

கொரோனா தொற்றிலிருந்து உங்களை காத்து கொள்வது எப்படி?

நீங்கள் இருமினாலோ அல்லது தும்மினாலோ டிஷ்யூ பேப்பர்களை பயன்படுத்துங்கள். அதை மறக்காமல் குப்பையில் போட்டு கை கழுவுங்கள். கைக்குட்டைகளை காட்டிலும் ஒருமுறை மட்டுமே பயன்படுத்தப்படும் டிஷ்யூக்களை பயன்படுத்துங்கள்.

 

டிஷ்யூ பேப்பர் இல்லை என்றால் உங்கள் முழங்கை மூட்டை பயன்படுத்தி இருமுங்கள். கைப்பிடிகள், லிஃப்ட் பொத்தான்கள், போன்ற அதிகம் பேர் தொடும் பொத்தான்களை தொடுவதை தவிருங்கள். காய்ச்சல், இருமல், சுவாசக் கோளாறு போன்ற அறிகுறிகள் இருப்பவர்களிடமிருந்து தள்ளி இருங்கள். உங்களுக்கு காய்ச்சல், இருமல், சுவாசப் பிரச்சனைகள் இருந்தால் எங்கும் போகாமல் வீட்டிலேயே இருங்கள்.

 

கோவிட்-19 என்றால் என்ன?

கொரோனா வைரஸ்கள் ஒரு பெரிய குடும்பத்தை சேர்ந்தவை. அது மனிதர்கள் மற்றும் விலங்குகள் மத்தியில் பல நோய்களை உருவாக்கும். மனிதர்களில் இந்த கொரோனா வைரஸ் சளி முதல் சார்ஸ் வரையில் உண்டாக்கக்கூடியவை.

 

தற்போது உலகின் பல்வேறு நாடுகளில் அச்சுறுத்தலை ஏற்படுத்தும் இந்த தொற்றுக்கு கோவிட்-19 என பெயரிட்டுள்ளனர். இந்த தொற்று சமீபமாக கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸால் ஏற்படுகிறது. இது விஞ்ஞானிகளால், சிவியர் அக்யூட் ரெஸ்பிரேட்டரி சிண்ட்ரோம் கொரோனா வைரஸ் 2 அல்லது Sars-CoV-2 என்று பெயரிடப்பட்டுள்ளது.

 

கொரோனா ஏற்பட்டால் இறப்பு நிச்சயமா?

கொரோனா தொற்று குறித்த அச்சம் பரவலாக இருந்தாலும், இதனால் இறப்பு ஏற்படும் விகிதம் மிகவும் குறைவே. ஒரு சதவீதத்திலிருந்து 2 சதவீதம் வரையே இறப்பு விகிதம் என கூறப்படுகிறது. ஆனால் அதை உறுதியாக கூற முடியவில்லை.

 

56,000 நோயாளிகளிடம் உலக சுகாதார நிறுவனம் சோதனை செய்தது; அதில் கண்டறிந்தவை:

 

6% பேரின் உடல்நிலை மோசமாக உள்ளது என்றும் அவர்களுக்கு - நுரையீரல் பழுது, செப்டிக் ஷாக் (தொற்றிலிருந்து நம்மைக் காக்க நோய் எதிர்ப்பு சக்தி ரத்தத்தில் வெளியிடும் ரசாயனம் தவறாக நமக்கு ஆபத்தை உருவாக்கும் நிலை), உறுப்புகள் செயலிழப்பு மற்றும் இறப்பு ஏற்படும் ஆபத்து ஆகியவை தென்படுகிறது.

14% பேருக்கு தீவிர அறிகுறிகள் காணப்படுகின்றன. - சுவாப்பதில் சிரமம் மற்றும் நுரையீரலுக்குள் சரியாக காற்று செல்லாமை

80% பேருக்கு மிதமான அறிகுறிகள் - காய்ச்சல், இருமல் சிலருக்கு நிமோனியாவும் இருக்கலாம்.

வயதானவர்கள், ஆஸ்துமா, நீரிழிவு மற்றும் இதய நோய்கள் உள்ளவர்கள் இதனால் அதிகம் பாதிக்கப்படலாம்.

 

கொரோனாவை குணப்படுத்த முடியுமா?

தற்சமயம் கொரோனா தொற்றை குணப்படுத்தும் மருந்து இல்லை. இருப்பினும் ஆய்வாளர்கள் மருந்து கண்டுபிடித்து விலங்குகளில் சோதனை செய்து வருகின்றனர் அது சரியாக இருந்தால் பின் மனிதர்களிடத்தில் சோதனை செய்யப்படும். விஞ்ஞானிகள் மருந்து கண்டுபிடித்தாலும் அது அதிகளவில் உற்பத்தி செய்யப்பட வேண்டும். கோவிட் 19 வைரஸ் என்பதால் ஆண்டி பாக்டீரியல் மருந்து (பாக்டீரியாவை அழிக்கும் மருந்து)) செயல்படாது.

 

கொரோனாவிலிருந்து உங்களை தற்காத்து கொள்வதற்கான சிறந்த வழி நன்றாக கைகளை சுத்தம் செய்வது. சோப்பையும், தண்ணீரையும் கொண்டு உங்கள் கைகளை நன்றாக சுத்தம் செய்யுங்கள்.

 

Thanks to bbcnews

 

 

 

Thursday, December 24, 2020

 


Canada and COVID 19 Virus

Canada has a population of 36.6 Million. Out of which 14.7 million live in Ontario province. The number of COVID 19 cases reported in Canada is about 534K, and deaths are 14.7 (2,7%)K The highest in Quebec and second highest in Ontario.  Comparatively, Canada is doing much better than the US because the provincial government coordinates with the Federal government and takes action to prevent the virus from being spread and keep it under control

Canada is a multi-ethnic country. A good percentage of people do not speak English or French. Hence health ministry directives have to be in many languages to reach the people. CIVID Virus has affected the country's economy and social behavior  Increased unemployment and reduced traffic in  401, 407, and 400. It decreased noise level and air pollution.

COVID-19 is a severe health threat, and the situation is evolving daily. The risk varies between communities, but Canadians' chance is surging given the





number of cases in Canada.

We continue to reassess the public health risk based on the best available evidence as the situation evolves.

1       Cabada has a better democratic system when compared to the US and Sri Lanka

2       Fewer HR violations

3       Excellent Health service

4       People respect the law

5       Population density is low

6       Low ethnic discrimination

7          Many  NPOs such as Red Cross, United way, Trillium Foundation involve themselves with

community organizations to fight Covid 19. They provide masks washing liquids, groceries, etc., free of charge through community organizations.

8 Special attention is paid to seniors who are in home Cares

Much more preventive measures are taken.

 9  X mas and New Year parties are held with a maximum of 25 people all must wear a   mask. Only at the time of sipping wine or brandy.

 


 

அஞ்சி அஞ்சி சாவார்

 

ருத்ரா இ.பரமசிவன் 

 

அவனின்றி ஓரணுவும் அசையாது

என்று சொல்லிவிட்டு

கொரோனாவுக்கு மட்டும்

இப்போது மனிதன் மீது

பழி போடுவது என்ன நியாயம்?

வைரஸ் என்றால்

உயிரற்ற பிண்டம் என்றும்

அதற்குள்ளும் 

இருப்பது குவாண்டம் எனும்

ப்ரோபபலிடி என்றும்

அதில்

உயிர் இருக்கும் ஆனால் இருக்காது

என்றும்

ஆராய்ச்சிக்கட்டுரைகளை

அடுக்கிக்கொண்டிருக்கிறான்

விஞ்ஞான மனிதன்.

லட்சக்கணக்கில் சாவு

எனும் மரண மழை தான்

மனிதனை 

அஞ்சி அஞ்சி சாகச்செய்து

கடவுள் பக்கம் தள்ளிவிடுகிறது.

பாவம் 

என் செய்வது?

மரணத்தீட்டு எனும்

மடி வந்து தாக்காமல் இருக்க‌

கடவுளுக்கும் கூட இங்கே

ஊரடங்கு தான்.

கனத்த இருட்டுகளின் பூட்டுகளுக்கிடையே

இந்த யாகமும் பூஜையும்

என்ன சாவி வைத்திருக்கிறது

நம் இருட்டை திறந்துபார்க்க?

விஞ்ஞானம் தன் விரலில்

இரு சாவிகளை சுழற்றிக்கொண்டிருக்கிறது.

ஆம்.

அவை தான் அந்த‌

"கருப்பு  தின்மமமும்   சக்தியும்  "Dark natter $ Enegy  

 

*****

இதற்கு  ஒரு விளக்கம்

 

 

                  கொரோனா – இயற்கை – மதம்

 

எங்கு தோற்றம் இருக்கிறதோ அங்கு வாழ்வு, மறைவு, மாறி மாறி  வரும் . இதை இந்து  மதம் பிரம்மன் . விஷ்ணு சிவன்  என்ற  தத்துவம்  மூலம்  சொல்கிறது . உலகில் மக்கள்  தொகை கட்டுக்கடங்காமல்  இருக்க  இயற்கை எனும் இறைவனின்  செயல் பாடுகலில் சுனாமி வைரஸ் , பூகம்பம், புயல், யுத்தம்  அடங்கும் . அதனால்  உலகத்தின் பாரம்கூடவில்லை  . கூடினால் பூமியின்  ஈர்ப்பு சக்தி, சுழற்றச்சி  வேகம் மாறும். இந்த பிரபஞ்சத்தில் பூமி ஒரு சிறு புள்ளி . அதில் மந்தன் மிக மிக மிக சிறிய  தூசி . பூமியின் மாறும் காலநிலை காரணமாக, காற்று மற்றும் வளிமண்டல அழுத்தம் அமைப்புகள் நிலையான மாற்றத்தை அனுபவிக்கின்றன. இந்த ஏற்ற இறக்கங்கள் காற்று மற்றும் செயற்கைக்கோள் தரவைப் பயன்படுத்திய நாசா வின்ஆராய்ச்சியின் படி, நமது கிரகம் அதன் அச்சில் எவ்வாறு சுழல்கிறது என்பதைப் பாதிக்கலாம். இதனை   2004  சுனாமியின் பின் கண்டனர் இந்தோனேசிய பூகம்பத்தின் தரவைப் பயன்படுத்தும் நாசா விஞ்ஞானிகள் இது பூமியின் சுழற்சியைப் பாதித்ததாகக் கணக்கிட்டு, நாளின் நீளத்தைக் குறைத்து, கிரகத்தின் வடிவத்தை சற்று மாற்றி, வட துருவத்தை சென்டிமீட்டர் மூலம் மாற்றினர். மிகப்பெரிய சுனாமியை உருவாக்கிய பூகம்பமும் பூமியின் சுழற்சியை மாற்றியது

பி கு

இலங்கையின்   மதிப்புக்கு   உரிய மகா நாயக்க தேரோக்கள்  மந்திரித்து  கொடுத்த புனித நீர் வானத்தில் இருந்து ஹெலிகோப்டேரில்  தெளித்து விட  கோதாவின்   கட்டளை நிறை  வேற்றப்பட்டது இனி பயமில்லை.. ஊரடங்கு சட்டம் தேவை இல்லை.

 எமாற்றி பதவிக்கு வந்தவருக்கு மடையர்களை  ஏமாற்ற யக்தி தெரியாதா ?.

 கொரோனாவைபோக்க சுவிஸ் நாட்டில் இருந்து  போதகர் வந்தார். விளைவு  பலருக்கு தெரிந்ததே . கொரோனா  புது  வணிகத்தை  உருவாக்கி வருகிறது அதோடு அரசியல் வாதிகளுக்கு பத்து விகிதம் கொமிசன் கிடைக்கும்

 சென்ற வருடம் பயங்கரவாதிகள்  தாக்குதல்   . இந்த வருடம் வைரஸ் தகுதல் . அடத ட வருடம்  வேலை  இல்லா  விகிதம் அதிகரிப்பு .வறுமையின்   தாக்குதலா. மனிதனை மனிதன் மதிக்கவிட்டால்  இது  ஒரு தொடர்கதை .” வாழு  வாழவிடு “ 

    கொரோனா என்ற நுண்ணுயிரி   பொன் குலேந்திரன்   ( கனபா )         பக்கம் எல்லாம்       ஊடகச் செய்தி    பார்வைக்கு எங்கும் கொர...